பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலம் வந்தார். அப்போது அவர் எழுதிய, ‘100 வினாக்கள், விடைகள்’’ என்ற சிறிய புத்தகம் ஒன்று கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 96வது கேள்வியை படித்ததும் அவர்களில் சிலருக்கு சிரிப்பு வந்துவிட்டது. நீங்களும் தான் படியுங்களேன் கேள்வி: எம்ஜிஆரின் ராமாவரம் ேதாட்டத்தை போலவே எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திலும் பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறதாமே? அதனால் அவரும் ஒரு வள்ளலாமா?