ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது : 125 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கின்றோம். இந்த 125 கோடி மக்களும் தெரிந்தோ, தெரியாமலோ மோடியிடம் ஏமாந்துகொண்டிருக்கின்றோம். எப்படி என்றால் ஒவ்வொருத்தரும் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் போடுகின்றோம். டீசல் போடுகின்றோம். இதற்கு எல்லாம் தினம்தோறும் அநியாயமாக வரிகளை நாம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு லிட்டர் பெட்ரோல் 74-75 ரூபாய். இது நியாயமான விலை கிடையாது. காரணம் நான் 1996ல் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தேன். இன்றைக்கு என்னிடம் பொறுப்பை கொடுங்கள்.