பிரதமர் மோடியை பற்றி மாயாவதி காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார். ‘மோடி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் பேசுவது எல்லாம், நான் டீ வித்தவன், நான் காவலாளி என்று இருக்கிறது. போன தேர்தலின்போது டீ விற்ற கதையை சொன்னார். இந்த தேர்தலுக்கு காவலாளி கதையை எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார். எளிய வாழ்க்கை வாழ்வதுபோல மக்களிடம் ஒரு தோற்றத்தை கொண்டுவர இப்படியெல்லாம் பேசுகிறார். ஓட்டுக்காக இந்த எளிய தோற்றத்தை சொல்லிக்கொள்கிறார். மக்களுக்கு இதெல்லாம் தெரியாமலா போகும்’ என கூறியிருந்தார். இதற்கு உ.பி. பாஜ எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.