பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை

கோவை : பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என  அரசு சட்டக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: