புதுச்சேரியில் மார்ச் 19 முதல் ஏப்ரல் 15 வரை இரவு 10 மணிக்குள் மதுபான கடைகளை மூட காவல்துறை உத்தரவு

புதுச்சேரி: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளை இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை இரவு 10 மணிக்குள் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் உரிமம் பெறப்பட்ட இடத்தை தவிர வேறு எந்த இடத்திலும் எவ்விதமான மதுவகைகளையும் வைத்திருக்க கூடாது என்றும் அனுமதியின்றி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானங்களை எடுத்து செல்லக் கூடாது என்றும் காவல்துறை அருவுறுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்ட விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: