கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கல்விசீர் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார். பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பீரோ, விளையாட்டு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பொதுமக்களை தலைமை ஆசிரியை லதா தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் செல்லதுரை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உமா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். பொன்னன்விடுதி ஊராட்சி செயலாளர் ராமையன் நன்றி கூறினார்.