உ.பி.யில் சமாஜ்வாடி கட்சிக்கு மிக செல்வாக்குள்ள மக்களவை தொகுதி சம்பல். முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் இத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சம்பல் தொகுதியில் முலாயமின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் இம்முறை போட்டியிடப் போவதாக பலமான பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால், இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டும் அதில் அபர்ணா பெயர் இல்லை மேலும், சம்பல் தொகுதியில் ஷபீக்-உர்-ரஹ்மான் பார்க் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அபர்ணா யாதவ் ஏமாற்றமடைந்துள்ளார். 2017 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணா போட்டியிட்டார்.