காதோடு... விவிஐபி தொகுதியில் மற்ற கட்சிகள் கிலி

தமிழக விவிஐபியின் சொந்த மாவட்டத்தில் உள்ள மாங்கனி தொகுதியில், எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதற்காக ₹50 கோடி வரை செலவு செய்யவும், பணப்பட்டுவாடாவில் வாக்காளர்களை நன்கு குளிரவைப்பது எனவும் தீர்மானித்து விட்டார்களாம். இதற்காக ஒவ்வொரு கிளை நிர்வாகிகள் வசமிருந்து, பட்டுவாடாவுக்கான பட்டியலும் தயாராகிவிட்டது. இதனால், பிரதான எதிர்க்கட்சி தவிர அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து களத்தில் குதிக்க முக்கிய நிர்வாகிகளிடையே கிலி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே, நான் போட்டியிடவில்லை என டிடிவி தரப்பிடம் ஓபனாக சொல்லிட்டாங்களாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: