ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 19 பேர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் உள்ளனர். குடும்ப சூழ்நிலையால் விடுமுறை நாளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று சிறைபிடிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 பேரும் விடுவிக்கப்படவில்லை. 19 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை (மார்ச் 13) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதையொட்டி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில், மீனவ பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.