களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கண்ணுமாமூடு கேரள பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.வினருக்கும் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் 2 ேபருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளில் சம்பவத்தில் ெதாடர்புடைய ஒரு பா.ஜ. பிரமுகர் களியக்காவிளை அடுத்த கோழிவிளை பகுதியில் ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். இதை கவனித்த கோழிவிளையை சேர்ந்த மார்க்சிஸ்ட் நிர்வாகி ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.