நய்ரோயி: எத்தியோபியாவில் இருந்து 157 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துகுள்ளானதில் பயணிகள் உள்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர்.எத்தியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம் இன்று காலை கென்ய தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ET 302 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணிக்குழுவினரும் இருந்தனர். இந்நிலையில் புறப்பட்ட 6 நிமிடங்களுக்குள்ளாகவே அதாவது அந்நாட்டு நேரப்பட்டி காலை 8 மணி 44 நிமிடங்களுக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.