தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பாலாஜி (26). இவர், நேற்று இரவு வீட்டு வாசலில் நின்றுகொண்டு உறவினர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோந்து வாகன டிரைவர் அருள் (27), “எதற்காக சண்டை போடுகிறாய். தெருவில் நின்று சத்தம் போடக்கூடாது, வீட்டுக்குள் செல்” என கூறியுள்ளார். அதற்கு அவர், நீ யார் கேட்பதற்கு என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பாலாஜி, அருளின் கன்னத்தில் பளார் என அடித்துள்ளார்.