தேமுதிக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு'ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது'என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

சென்னை : தேமுதிக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்குஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக -பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்விக்கு பியூஷ் கோயல் நேரடியாக பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: