நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது

நாகை : நாகையில் பெண்ணை கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜம்மு- காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் நடந்ததைப் போல தமிழகத்திலும் கோவிலில் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் கூலித் தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. காமராஜர் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: