குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சொந்தமான குடோனில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திக்குறிச்சி எனும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட புகையிலைப் பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டிச்சென்ற ரெசிப் மற்றும் கம்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், செறுகோல் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஏ.எம்.எஸ் ஏஜென்சி என்ற பெயரில் மெத்தை குடோன் வைத்திருப்பதாக கூறி பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது.