வாஷிங்டன்: ‘அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அதேபோல் நாமும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும்’’ என அதிபர் டிரம்ப் தனது ஆதாரவாளர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கடந்த ஜனவரி 24ம் தேதி பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘அமெரிக்கா விற்பனை செய்யும் ஹார்லே-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதித்து வந்தது. இது குறித்து இந்தியாவிடம் 2 நிமிடம் பேசினேன். இதையடுத்து இந்த வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இந்தியா விற்பனை செய்யும் மோட்டார் சைக்கிளுக்கு நாம் 2.4 சதவீத வரி மட்டுமே விதிக்கிறோம்’’ என கூறியிருந்தார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டன் மேரிலேண்ட் பகுதியில் அரசியல் நடவடிக்கை குழு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் 2 மணி நேரத்துக்கு மேலாக பேசினார். உள்நாட்டு விஷயங்கள், சர்வதேச விஷயங்கள், இந்தியா உடனான இருதரப்பு உறவு என பல விஷயங்கள் பற்றி அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது இந்தியா பற்றி அவர் கூறியதாவது: