புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலில் சமக யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 5ம் தேதி அறிவிக்க உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வாகைக்குளம் வந்த சமக தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி: நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தொகுதிக்கு ரூ.20 கோடி முதல் 30 கோடி தேவைப்படுவதால் அச்சமாக உள்ளது. மக்களுக்காக சேவை செய்யும் நபர்களை சுதந்திரமாக தேர்வு செய்ய வேண்டும். அன்றுதான் உண்மையான ஜனநாயகம் உருவாகும். அரசியலில் தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், பின்னர் கூட்டணிக்காக ஒன்று சேருவதும் எப்படி சரியானதாக இருக்க முடியும்.