சென்னை: அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸ் எஸ்.ஐ. அற்புதம், தலைமையில் ஒரு காவலர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, எஸ்.ஐ. அற்புதம், அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை வழிமறித்து ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா 50 முதல் 100 ரூபாய் வரை கட்டாய வசூலில் ஈடுபட்டார். மேலும், முறையாக ஆவணங்கள் வைத்திருந்தாலும் ஏதேனும் காரணம் கூறி, வசூல் செய்தார். அவர்களது வசூல் வேட்டையை சமூக ஆர்வலர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருக்கிறது. இந்த வைரல் வீடியோ உரையாடலை பார்த்து சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.