திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ராமசாமி நகரில் புதியதாக திறக்கப்பட்ட அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் செங்கல் கொண்டு கடையை திறக்க முடியாதபடி அடைத்தனர். மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் நிலவி வந்தது.