நாகர்கோவில்: மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு வைகோ கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நாங்கள் தான் ஏ அணி என கமல் கூறியுள்ளார். சினிமாவில் தான் ஏ சான்றிதழ், யு சான்றிதழ் கொடுக்கப்படும். கமல் எந்த அடிப்படையில் அவரது கூட்டணியை ஏ என கூறினார் என தெரியவில்லை. விஜயகாந்த் எங்களுடன் வருவார் என நம்புகிறேன். வைகோவுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.