மதுரை : தமிழக அரசின் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாக அறிவிப்பு உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.