திருமலை: திருப்பதியில் உள்ள 9 தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் 2 நாட்களாக நடத்திய அதிரடிச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திருப்பதியில் ரெட்டி அண்டு ரெட்டி காலனி, பைபாஸ் சாலை, குருவாரெட்டி நினைவு மண்டபம், அலிபிரி சாலை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 9 தனியார் மருத்துவமனைகளில் கடந்த 19ம் தேதி நள்ளிரவு முதல் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதில் விஜயவாடாவில் உள்ள வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மல்லிகா அர்ஜூனா தலைமையில் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள், சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.