திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து நடைபெற உள்ளது. ராமதாஸ் அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ் பங்கேற்க உள்ளனர். மேலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் முதலமைச்சரை வரவேற்க ராமதாஸ் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.