வர்த்தகம் தொழிலாளர்களுக்கு அதிரடி சலுகை ‘சூப்பர் ஸ்பெஷாலிடி’ சிகிச்சை பெற இஎஸ்ஐ 6 மாதம் கட்டினால் போதும்: சார்ந்து வாழ்வோரின் சம்பள வரம்பு ரூ.9,000 ஆக உயர்வு Feb 21, 2019 ஈஎஸ்ஐ புதுடெல்லி: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான குறைந்த பட்ச பங்களிப்பு காலம் 2 ஆண்டில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் அரசு காப்பீடு சட்டத்தின்படி, நோயுற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்க இஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதம் ரூ.21,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கான பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் குடும்பத்தினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். நோயின் தன்மை, தீவிரம் கருதி இதனுடன் இணைந்த பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்த தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு குறைந்த பட்சம் இந்த திட்டத்தில் 2 ஆண்டு பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனை 6 மாதமாக குறைத்து இஎஸ்ஐ வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 6 மாத இஎஸ்ஐ பங்களிப்பு அளித்தவர்களுக்கு நவீன சிகிச்சை வசதிகள் இலவசமாக கிடைக்கும். தொழிலாளர்களை சார்ந்து வாழும் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோருக்கு மாத சம்பள வரம்பு ரூ.5,000 ஆக இருந்தது. இது ரூ.9,000 ஆக உயர்த்தப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், இஎஸ்ஐயுடன் இணைந்த மருத்துவமனைகளில் இஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் இஎஸ்ஐ ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை செலவில் 8ல் 7 பங்கு செலவை இஎஸ்ஐயும், ஒரு பங்கு செலவை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்கின்றன. இந்த புதிய சலுகைகளால் பல லட்சம் தொழிலாளர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளம் ரூ.21,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற குறைந்த பட்சம் 2 ஆண்டு இஎஸ்ஐ பங்களிப்பு கட்டாயம் என இருந்தது. இது தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. இஎஸ்ஐயுடன் இணைந்த பிற மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்வோரின் சிகிச்சை செலவை இஎஸ்ஐ முழுமையாக ஏற்கும். தொழிலாளர்களை சார்ந்து வாழ்வோர் இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்கான அவர்களது சம்பள உச்சவரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி வேட்பாளரை சிக்க வைத்த முக்கிய தலைகளின் சதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி