சிவகங்கை ஊரமைப்பு அலுவலகத்தில் ரெய்டு

சிவகங்கை:  சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட இந்த அலுவலகத்தில்தான் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வாங்க வேண்டும். இங்கு என்ஓசி வாங்க மொத்த மதிப்பீட்டில் 3 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் கிளம்பின. இதனடிப்படையில் இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.50,990 மற்றும் ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: