சென்னை: இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜகவுடன், பாமக சேருவது தவறல்லவா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவுடன் பாமக எப்படி கூட்டணி வைக்கிறது என்றும், சமூக நீதிக்கு எதிரான பாஜக, அதிமுக, பாமக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.