முதுமலையில் 18ம் தேதி முதல் வளர்ப்பு யானைகளுக்கு நலவாழ்வு முகாம்

ஊட்டி: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் ஜனவரியில் முடிந்தது. தற்போது, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப், முதுமலை தெப்பக்காட்டில் உள்ள  யானைகளுக்கான நலவாழ்வு முகாம் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைக்கிறார்.  இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கானநலவாழ்வு முகாம் வரும் 18ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: