சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை இபிஎஸ்-ஓபிஎஸ் நேற்று தொடங்கி வைத்தனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்தனர்.