சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதை கணக்கில் கொண்டு, எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 3,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தும், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தும், 3000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்தும் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.