சென்னை: அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் தொடர் எதிர்ப்புக்கிடையில் கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். மக்களின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ்பாதுகாப்புடன் அத்திட்டம் தொடர்பான வேலைகளைச் செய்ய முயன்றபோது பொதுமக்களைத் திரட்டிப்போய் கேள்விகேட்ட பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை தமிழக அரசு கைது செய்திருக்கிறது.