அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பிய  ஜாக்டோ- ஜியோ அமைப்பு முடிவு வரவேற்கத்தக்கது. அவர்கள் மீதான வழக்குகள் மற்றும் இடமாறுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும், அரசு ரத்து செய்யும் என எதிர்பார்ப்பது தவறல்ல. அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இடமாறுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: