நாகர்கோவில்: கவுதமாலா நாட்டு மத்திய அமெரிக்காவின் தூதராக குமரியை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் முபாரக். இவரது தந்தை பாவா சாகிப். தாயார் மும்தாஜ். முபாரக் சவுதி அரேபியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். தற்போது மத்திய அரசு முபாரக்கை மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவின் தூதராக நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.