திண்டுக்கல் அருகே பேருந்தின் ஏணிப்படியில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதனால் மாணவர்கள் பேருந்தின் ஏணியில் தொங்கிவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் இவர்கள் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.