திண்டுக்கல் அருகே பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்... விதிகளை மீறி பயணிகளை ஏற்றியதால் பேருந்து பறிமுதல்

திண்டுக்கல் அருகே பேருந்தின் ஏணிப்படியில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதனால் மாணவர்கள் பேருந்தின் ஏணியில் தொங்கிவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் இவர்கள் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்ததுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். விதிகளை மீறி பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: