டெக்சாஸ்: அமெரிக்காவில் குற்ற வழக்கில் ஆஜராக அழைப்பாணை கொடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவழக்கு ஒன்றில் ஆஜராக கோரி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டது. இதனை நேரில் வழங்குவதற்காக ஹோஸ்டன் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.