சென்னை : கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடை புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரிய தங்கப்பன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் மாநில வளர்ச்சி முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.