பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வளபிரமன்காடு ஊராட்சியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 1982ம் ஆண்டு 100 அடி அளவில் போர்வெல் போடப்பட்டது. அதில் கடந்த ஒரு மாதமாக அதிகளவில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வருகிறது. தற்போது அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் சிங்காரத்தின் கிணற்றில் மட்டும் நீர் பொங்கிகொண்டே இருக்கிறது. அதாவது கிணற்றுக்குள் இருந்து அதிக அளவில் வாயுக்கள் வெளியேறி நீர்க்குமிழிகள் வெளியேறுகிறது. அதே நேரத்தில் தண்ணீரும் பொங்கிகொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தினமும் ஏராளமான மக்கள் வந்து அந்த கிணற்றை பார்த்து செல்கிறார்கள். அதே நேரத்தில் தண்ணீரில் எந்த வித்தியாசமும் இல்லை. சுவையும் மாறவில்லை.