தாவோஸ்: இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டு கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018ம் ஆண்டு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாள் ஒன்றுக்கு 2,200 கோடி அதிகரித்துள்ளது. உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு 250 கோடி டாலர் என, 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியர்களில் 13.6 கோடி பேர் 2004ம் ஆண்டு முதல் ஏழையாகவே உள்ளனர் நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 77.4 சதவீதம், இந்தியாவில் கோடீஸ்வரர்களாக உள்ள 10 சதவீதம் பேரிடம் உள்ளது.