மதுரை: தமிழகம் முழுவதும் ஜன.23ம் தேதி முதல் நடைபெறவிருந்த கோயில் ஊழியர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு திருக்கோயில் ஊழியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.