காந்திநகர்: ‘‘தொழில் செய்ய மிகவும் எளிதான நாடுகளின் பட்டியலில், அடுத்தாண்டுக்குள் இந்தியா முதல் 50வது இடத்தில் இருக்கும்’’ என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2003ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, முதலீடுகளை கவர்வதற்காக ‘துடிப்பான குஜராத்’ என்ற மாநாட்டை தொடங்கினார். இதன் 9வது மாநாடு தலைநகர் காந்தி நகரில் நேற்று தொடங்கியது, இதை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:உலக வங்கி தயாரிக்கும் தொழில் செய்ய எளிதான நாடுகள் பட்டியலில், இந்தியா 75 இடங்களை முன்னேறி, தற்போது 77வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.