பொங்கல் பண்டிகையையொட்டி ரேக்ளா பந்தயம்: கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பயிற்சி

கோவை: கொங்கு மண்டலத்தில் விவசாயிகள் பாரம்பரிய விளையாட்டாக கருதும் ரேக்ளா போட்டிக்கு காளைகளை தயார் படுத்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக ரேக்ளா பந்தயம் நடைபெற இருக்கிறது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்க இருக்கும் காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதேபோன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு களங்களை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாலமேட்டில் வரும் 16-ம் தேதியும் அலங்காநல்லுரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக காளையராலும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: