சென்னை: முத்தலாக் சட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் வடசென்னை மக்களின் மருத்துவர் ஜெயச்சந்திரன் நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:முத்தலாக் சட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இருந்தபோதும் அன்வர்ராஜா எம்பி முத்தலாக் சட்டம் குறித்து தெளிவாக கூறியுள்ளார்.