சென்னை: குட்கா வழக்கில் இரண்டாம் கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை உயரதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. குட்கா வியாபாரி மாதவராவ் லஞ்ச பட்டியலில் மேலும் பலர் இருப்பதால் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளோரிடம் ஜனவரி மாதம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.