திருச்சி: தமிழகத்தில் தாமரை ஒருநாளும் மலராது என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மதவெறி மட்டுமல்லாது ஆணவப்படுகொலைக்கு எதிராகவும் பெரியாரின் தொண்டர்கள் திரளுவார்கள் என அவர் கூறினார்.