மதுரை: ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலையை திறப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஜன.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஐகோர்ட் மதுரை கிளை.