நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அளித்த நிவாரண தொகை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 25,000 வீதம் இழப்பீடு தரவேண்டும் என்பது அவர்களுது கோரிக்கையாக உள்ளது. மேலும் புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.