மதுரை : மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேஷ், மருது, கண்ணன், மகாலிங்கம்,ஜெயபால், தமிழ், ராஜபாண்டி, மணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஆர்பிஎப் வீரர் குமார், முன்னாள் காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.