மதுரை: ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞரும் மக்கள் கண்காணிப்பக நிர்வாகியுமான ஹென்றி முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.