ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால கடன் ரூ.6,100 கோடியை தள்ளுபடி செய்து முதல்வர் பூபேஷ் பாகெல் உத்தரவிட்டுள்ளார். சட்டீஸ்கரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜ.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. பூபேஷ் பாகெல் நேற்று முன்தினம் முதல்வராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, அடல் நகரில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர், முதல்வர் பூபேஷ் பாகெல் அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டீஸ்கரில் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளில் கடந்த நவம்பர் 30ம் தேதி வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம், 16.65 லட்சம் விவசாயிகளின் ரூ.6100 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.