முகத்தில் மிளகாய் பொடி தூவி அம்மா உணவக பெண் ஊழியரிடம் சம்பள பணம் 85 ஆயிரம் அபேஸ்

சென்னை: மிளகாய் பொடி தூவி அம்மா உணவக பெண் ஊழியரிடம் சம்பள பணம் 85 ஆயிரத்தை கொள்ளையடித்து ெசன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு வெங்கடாசலம் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (38). சூளைமேட்டில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் அம்மா உணவகத்தில் வேலை ெசய்யும் ஊழியர்களுக்கு இவர்தான் சம்பளம் வழங்குவது வழக்கம். அதன்படி, ேநற்று ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ராஜலட்சுமி அருகில் உள்ள ஐஓபி வங்கிக்கு சென்று 85 ஆயிரம் எடுத்தார். பின்னர் பணத்தை தனது மொபட்டில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் முன் மொபட்டை நிறுத்தி, பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, பைக்கில் வந்த 2 பேர், ராஜலட்சுமி முகத்தில் மிளகாய் பொடியை தூவி, 85 ஆயிரத்தை பறித்துக்ெகாண்டு தப்பினர். கண் எரிச்சல் தாங்காமல் ராஜலட்சுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள் தப்பினர். இதுகுறித்து ராஜலட்சுமி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: