டெல்லி: மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இது நீதிபதி கான்வில்கர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தொடர்ந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.